இன்பங்கள் தேடும் உலகில் – நானும்
இறைவா உனைத்தேடுகின்றேன்
துன்பங்கள் ஏனை சூழ்கையில் – ஏனோ
துயரத்தால் உனை வெறுக்கின்றேன்
அங்கங்கள் உருகி வேண்டுகின்றேன் – இறைவா
அடிமை எனை மன்னிப்பாயா
வேசம் கொள்ளும் உலகில – நானும்
பாசம் கொள்ள நினைக்கின்றேன்
நாசம் செய்யும் பலரால் – ஏனோ
மோசம் செய்தும் வாழ்கின்றேன்
நேசத்தோடு கேட்கின்றேன் – இறைவா
தாசன் எனை மன்னிப்பாயா
மோகம் கொள்ளும் உலகில் – நானும்
நல்யாகம் இயற்ற நினைக்கின்றேன்
தாகம் பல என்னுள் வரவ – ஏனோ
தவறு செய்தும் வாழ்கின்றேன்
தேகம் உருக தேடுகின்றேன் – இறைவா
தேடும் எனை மன்னிப்பாயா
மனிதம் கொன்று வாழும் உலகில் – நானும்
புனிதம் கொண்டு வாழ நினைக்கின்றேன்
மீறும் என் உணர்வுகளால் – ஏனோ
மிருகம் கொண்டும் வாழ்கின்றேன்
கூறும் என்வார்த்தைகள் உன்பெயரை – இறைவா
குழந்தை எனை மன்னிப்பாயா
அரவணைக்கா உலகில் – நானும்
அன்புகாட்டநினைக்கின்றேன்
பிறரணைக்க மறுக்கையில் – ஏனோ
பித்துப்பிடித்தும் போகின்றேன்
எனையணைக்கும் உனை வேண்டுகின்றேன் – இறைவா
இனியும் அணைத்தெனை மன்னிப்பாயா