நட்பு….
தனக்கில்லை என்றபோதும்
தன்தேவை பார்ப்பதில்லை
தன்னிறைவு காணபதில்லை
நண்பனுக்கோர் தேவையென்றால்
இருப்பதையும் கொடுத்துவிட்டு
இல்லாமலிருப்பதிலும்
இன்பம் காண்பதுவே நட்பு
வீட்டுக்கொரு வேலையென்றால்
வெளியே செல்வதில்லை
வீணாக அலைவதில்லை
நண்பனுக்கோர் வேலையென்றால்
நாளிகைகள் பலதாண்டி
நாள்முளுதும் அலைவதிலும்
நற்சுகம் காண்பதுவே நட்பு
கேட்டபோதும் கொடுப்பதில்லை
அண்ணனுக்கோ தம்பிக்கோ
எம்முடையை
நட்பென்று வந்துவிட்டால்
கேளாமலே கொடுத்துவிட்டு
அவன் அணிந்துவரும் அழகைப் பார்த்து
அகம் மகிழ்வதே நட்பு
சரியெது தவறெது
நல்லது கெட்டது
யார்சொல்லியும் கேட்பதில்லை
நண்பனொருவன் உரைத்துவிட்டால்
நாள்முழுதுமதுவே வேதவாக்கு
நாட்கள் கடந்துமதுவே
நல்வாக்கு
உயிர்தந்த பெற்றோரிடம்
உடன்பிறப்புகக்களிடம்
உறவுகளிடமும்
மறைத்துவிடும் விடையங்களைக் கூட
மகத்தான நண்பணிடம்
மனம் திறந்து பேசிவிட்டு
மனஅமைதி கொள்வதுவே நட்பு
மொத்தத்தில் நட்பு
உறவுகளில் உன்னதம்
உணர்வுகளில் அற்புதம்
உரிமைகளில் முதலிடம்
உயிரிலும் மேலிடம்
தேவையென்று வந்துவிட்டால்
உயிரையும் கொடுத்துவிடும்
November 12, 2009 at 5:20 am
இந்த கவிதை வாசிப்பது, என்னை நான் முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்கதை போன்றிருக்கிறது.
நட்பை அழகாக கவிதைப்படுத்தியிருக்கிறீர்கள்.
November 12, 2009 at 6:53 am
நன்றி யோகா அண்ணா
February 9, 2010 at 6:31 am
its so nice….keep it up