கவி படித்து நானிருந்தேன்
கவி எழுதி நானறியேன்
எழுதுமெண்ணம் இருந்ததில்லை
இருந்தும் எழுதிவிட்டேன் சிலகவிகள்
கவியென்று நானுரைக்குமுன்
உரைத்தனர் பல கவிஞ்ஞர்கள்
கவியல்லவா இதுவென்று
கவிஞ்ஞனானேன் நானுமன்று
“மனிதத்தைத் தேடுகின்றேன்” முதல்
“மன்னிப்பாயா” வரை மலர்ந்ததென் கவிகள்
மணம் வீசியது பலர் மனங்களில்
மனமகிழ்ந்தேன் அத்தினங்களில்
கவிதையும் நானுமாய்
கழிப்போடு நகர்ந்த என் நாட்கள்
கால ஓட்டத்தில் கலைந்து போனது
கலையாத அந்த கவிகளோடு
காலங்கள் கடந்தும்
கவியுணர்வு என்னுள் தளிர்விட
கடந்துவந்த என்கவிப்பயணத்தை
கணப்பொழுது சிந்திந்தேன்
மன்னாரமுதன் முதல் மஞ்சு வரை
கொஞ்சும் வார்த்தைகளால்
விஞ்சும் கவிதையென
விதைத்த பல கருத்துக்களும்
பேரன்புடன் வித்தியாசாகர்
பெரும்தொலைவில் இருந்தும்
“அருமை”யென அழகுதமிழால்
பெருமையோடிட்ட பல கருத்துக்களும்
என்றோ நின்றுபோன
என் கவிப்பயணத்தை
இன்றே தொடரத்தூண்டுகின்றது
எங்கேயென் எழுதுகோல்…………..?????